திருநாளைப்போவார்160நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அனுபல்லவி.

சந்ததமுந்தில்லை யம்பலத்தானைச்
சிந்தித்துமாயச் சிக்கறுக்காமல் (இந்தச்)

சரணங்கள்.

அங்கமலங்களைப் போக்கிடுஞ்சிவ
கங்கையிலாடிக் களங்கமறாமல் (இந்தச்)

ஆடும்நடனங்கண் டானந்தமாகிப்
பாடிப்படித்துப் பணிந்துகொள்ளாமல் (இந்தச்)

அஞ்சக்கரத்தை யெடுத்துருவேற்றி
வஞ்சப்பிறவியின் மயக்கறுக்காமல் (இந்தச்)

பாலகிருஷ்ணன்றொழும் பாதத்தைக்கும்பிட்டுச்
சீலமுள்ளமுத்தி சித்திபெறாமல் (இந்தச்)

ராகம் - கமாஸ்  ;  தாளம் - திச்ரஏகம்.

பல்லவி.

கனகசபேசன்சேவடி நான்கண்டதில்லை - தில்லைக்
கனகசபேசன்சேவடி.

அனுபல்லவி.

கனகசபாபதியைக் கண்டபேரைக் கண்டால்போதும்
சனனமரண மோகந்தீர்ந்து-சிவனைச்சேரவே. (கனக)

சரணங்கள்.

மானிடசாதியில்பிறந்து மங்கயர்மோகத்தில்விழுந்து
தானுந்தவமுறையிழந்து தன்னரசுநாடாய்த்திரிந்து (கனக)