அல்லும்பகலோயாது
அடியார்கள்
கோஷ்டி
அரகராவென்றமிர்த பானமதைப்
போட்டித்
தில்லைவாழந்தணர்கள் கைபிடித்துக் கூட்டித்
சிக்கெனவேதிரைதிறந்து பரவெளியைக்
காட்டித் (தரி)
நஞ்சுண்டகண்டனுக்குக்
கொன்றைமலர் சாற்றி
நல்லதிருச்சாந்தணியு மம்பிகையைப் போற்றி
குஞ்சிதபதந்தனது மனத்திலுரு வேத்திக்
கோபாலகிருஷ்ணன்றொழும் நடராஜ
மூர்த்தி (தரி)
__________
வசனம்.
நந்தனார், தனக்குத்
தரிசனங்கொடுக்க அம்பலவாணர் எப்போது
வருவாரோவென்று
விசாரப்படுவார்.
இராகம் - ஜஞ்ஜூடி ; தாளம் -
ஆதி.
பல்லவி.
எப்போவருவாரோ எந்தன்கலிதீர
எப்போவருவாரோ.
அனுபல்லவி.
செப்பியதில்லைச்
சிதம்பரதேவன் (எப்போ)
சரணங்கள்.
நற்பருவம்வந்து நாதனைத்தேடும்
கற்பனைகள்முற்றக் காட்சிதந்தாள (எப்போ)
அற்பசுகவாழ்வி லானந்தங்கொண்டேன்
பொற்பதத்தைக்காணேன் பொன்னம்பலவாணன் (எப்போ)
பாலகிருஷ்ணன்போற்றிப்
பணிந்திடுமீசன்
மேலேகாதல்கொண்டேன் வெளிப்படக்காணேன் (எப்போ)
|