திருநாளைப்போவார்165நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

துக்கடா.

ராகம்- ஜஞ்ஜூடி  ;  தாளம் - ஆதி.

வருவாரோ அருள் புரிவாரோ-எந்தன்
மனதுசலிக்குது நானென்னசெய்வேன்
அரகரசங்கர வம்பலவாணன்
ஆதரிக்காதிருப்பாரோ ஒருகால் (வருவாரோ)

_________

வசனம்.

நந்தனார், தான் சின்னசாதியானதால் வருவாரோ வாராரோ வென்று
சஞ்சலப்படுவார்.

ராகம் - ஸு ரடி  ;  தாளம் - ஆதி,

பல்லவி.

வாராமலிருப்பாரோ-ஒருநாள்-வருவாரோவறியேன்.

சரணங்கள்.

பாராமலிருப்பேனோ பதஞ்சலிமுனிக்குப்பொற்
பாதங்கொடுத்தபர மேசுவரனானென்று (வாராம)

கனவினில்வந்து கழனிமுழுதும்நட்டு
மனதுமகிழ்ந்தென்னை வாவென்றுசொன்னவர் (வாராம)

கலக்கமறவேயவர் காலுக்குக்கும்பிட்டுக்
குளத்தங்கரையில்நின்று கூப்பிடும்வேளையில் (வாராம)

அல்லலறுத்துப்பர மானந்தமேதருந்
தில்லைத்தலத்தைக்கண்டு தெரிசனம்பண்ணியும் (வாராம)