அண்ணல்கோபால
கிருஷ்ணன்பணியுந்திரு
வம்பலமேவும்பொன் னம்பலவாணா
(போது)
_________
வசனம்.
ஜன்மமே கஷ்டம், அதிலும்
புலையனாய்ப் பிறப்பது மிகவும் நஷ்டம் என்று
நந்தனார் சொல்லுகின்றார்.
ராகம் - கரஹரப்பிரியா ;
தாளம் - ரூபகம்.
பல்லவி.
இந்தஜன்மம்வேண்டாம்-இனி
எந்தஜன்மம் வந்தாலும்வரட்டும்
அனுபல்லவி.
நந்திநடுவினில் மந்திரங்கள்சொல்லி
வந்தனைகள்செய்து சிந்தைமகிழாத
(இந்த)
சரணங்கள்.
வேதமறிந்தவர்
பாதம் பணிந்தவர்
போதமடைந்திடாத் தீதடைந்தேன்பாவி
(இந்த)
பாவிப்பறையாநீ
தூரவிலகென்று
ஆவிதவித்திடப் பாரிலுரைத்திடும்
(இந்த)
__________
ராகம் - கௌரிமனோஹரி ;
தாளம் - சாபு.
பல்லவி.
எப்போதொலையுமிந்தத்
துன்பம் - ஜகதீசன்
கருணையிருந்தாலல்லோ இன்பம். (எப்போ)
|