அனுபல்லவி.
கர்ப்பவாசதுக்கம்
ஆனாலும்
கேடு
கௌரிமனோகரனைத் தினம் நாடு (எப்போ)
சரணம்.
ஆசையுடனலை யாதவிடங்களுண்டோ
அனவரதமும் சுகலேசமிதில் தெரியாமல்போனதன்றோ
கோபாலகிருஷ்ண-தாசன்தொழும்நடராஜமூர்த்தியைப்
பூசைகள்செய்யாமற் போனது பாசமறவழியில்லை
பஞ்சகோசங்களை நானென்றுநம்பினது (எப்போ)
_________
ராகம் - ஆஹிரி ; தாளம் -
ரூபகம்.
பல்லவி.
தில்லைவலஞ்சுற்றினார் -
சிதம்பரத் - தெல்லைவலஞ்சுற்றினார்.
அனுபல்லவி.
தில்லைவலஞ்சுற்றினார்
தேவருமறியாத
எல்லைவாசல்கடந் துள்ளிருளறவேண்டித் (தில்லை)
சரணங்கள்.
சாதிகுறையைத்தானே
சந்ததமுநினைந்து
வேதனைகொண்டுள்ளம் வெதும்பியேவாடிப்
பாதிப்பிறையணியும் பரமசிவனைக்கண்டு
போதமடைந்துபரி பூரணமாகத் (தில்லை)
மோகவலைக்குட்சிக்கி
முழுமூடனாகவே
போகமேநிலையென்று புத்திகெடாமலுமைப்
பாகனைவேண்டிநற் பரவசமாகியே
ஏகரசத்திற்றன்னை யிருத்திச்சுகிக்கவே
(தில்லை)
|