திருநாளைப்போவார்170நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஓராறுதாண்டியே யுண்மணிக்கோட்டைகள்
    சீராறுங்காணாத சிதம்பரரகசியம்
ஈராறுகால்கொண்டு இருத்திப்புலனைந்தும்
    பேராறுபெருகியே பெருவெளிகாணத் (தில்லை)

_________

வசனம்.

இப்படித் தில்லைத் தலத்தை விடாமல் சுற்றிவந்தால் தன்னிடம் சுவாமி
வருவாரென்று மனத்தைப்பார்த்துச் சொல்கின்றார்.

ராகம்-யமுனாகல்யாணி  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

வருவார்வருவார்மனமே நீ மயங்காதிரு சொன்னேன் சொன்னேன்.

சரணம்.

வேணதுதருவார் கருணைபுரிவார் தில்லைத் திருவம்பலவர்
பரகதியுந் தருவார் சாதி பறையனென்று பாரார் நீயதை
உறுதிகொள்ளவேணும் அன்புடனே
அரகரவென்றொரு தரஞ்சொன்னால்போதும் (வருவார்)

__________

வசனம்.

நந்தனார், தன்னை இரட்சிக்கும் சமயம் இதுதான் என்று சொல்லுகின்றார்.

ராகம் - தன்யாசி  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

இதுநல்ல சமயமையா-இரட்சிக்க-இதுநல்ல சமயமையா.