திருநாளைப்போவார்171நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணங்கள்.

இதுநல்லசமயமையா என்னைரட்சித்தாளும்
ஈச மகேச நடேச சபேச (இதுநல்ல)

பாலகிருஷ்ணன்போற்றும் பாதங்களைக்காட்டிச்
சீலமுள்ளமுத்தி சேருவதற்காக (இதுநல்ல)

_______

வசனம்.

நந்தனார், இவ்வளவுசொல்லியும் சுவாமி இரங்காமல் போக
வேண்டியதென்னவென்று சொல்லுகின்றார்.

ராகம் - பேஹாக்  ;  தாளம் - ரூபகம்.

பல்லவி.

இரக்கம்வாராமற் போன தென்ன காரணம்சுவாமி.

அனுபல்லவி.

கருணைக்கடலென்றுன்னைக் காதில்கேட்டுநம்பிவந்தேன். (இ)

சரணங்கள்.

பழியெத்தனைநான்செய்யினும் பாவித்திடுஞ்சிதம்பரமென்று
மொழிகற்றவர்வழிபெற்றவர் கனகசபாபதி யேயின்னும் (இ)
ஆலுமருந்தியண்டருயிரை யாதரித்தவுன்கீர்த்தி
பாலகிருஷ்ணன்பாடித்தினமும் பணிந்திடும்நடராஜமூர்த்தி (இ)

_________

கலித்துறை.

அன்று மூவகை யங்கியில் வேள்விகள் தொடர்ந்தும்
குன்ற லாத்தவப் புண்ணிய மாமலை குவித்தும்
என்று மேற்பவர்க் குதவியும் வருபவர்க் கன்றி
மன்று ளாடியின் பாதத்தில் மனங்கொள வருமோ.