வசனம்.
நந்தனார், மகாபுண்ணியசாலிகளுக்கு
முக்திவருமே யன்றித் தனக்கு வாராதென்று
சொல்லுகின்றார்.
கண்ணிகள்.
ராகம் - தன்யாசி ; தாளம் -
ஆதி.
சாதியில்தாழ்ந்திடும்
புலையனுக்கும்பர கதியோ-வேத
சாஸ்திரநான்கினு மோதறியாதது
விதியோ
நண்டுநந்தைகளை வதைசெய்தருந்திய
தேகம்-மன்றுள்
நடனதரிசனங் காணவென்றாலதி
மோகம்
எந்தவழியைக்கண் டீடேறுவது
ஞாயம்-ஜக
தீசனுக்கன்றோ தெரியமந்தவு
பாயம்
சிதம்பரம்போவே னென்றுரையாத
பாவி- இந்த
ஜன்மமெடுத்து
வீணாகத்தவிக்குதென் னாவி.
________
வசனம்.
நந்தனார், இப்படி நான்
ஈனசாதியாயிருந்தாலும், உம்முடைய சரணாரவிந்த
பத்தியை மறந்தவனல்லவென்று
சொல்லுகின்றார்.
ராகம் - மணிரங்கு ; தாளம் -
ரூபகம்.
பல்லவி.
எப்படிக் கெட்டாலுமுந்தன்
பொற்பதம்மறவேனானையா.
சரணம்.
அற்புதமாகியதில்லை
யம்பலவாணரேயென்
சொற்பனத்தி லும்மையன்றி
|