திருநாளைப்போவார்174நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம் - கீரவாணி  ;  தாளம் - மிச்ரஏகம்.

பல்லவி.

இன்னமும் ஸந்தேஹப்படலாமோ

அனுபல்லவி.

பொன்னம்பலந்தனில் தாண்டவமாடிய
பொற்கழலைநினைவில் வைக்கத்தெரிந்த நீதான் (இன்)

சரணம்.

அன்னமயமெனும் கோசம்தானே-அந்தணர்முதல்புலையர்வரைக்கும்
பின்னமறவேதோணுதே-இந்தப் பேதமது காணேன்
தன்னையறிகிறதவமேபெரிதென்று - தரணியில்கோபாலகிருஷ்ணன்
சொன்னதெல்லாம்மறந்து-இந்தமாயச் சுழலிலேவீழ்ந்தலைந்தாய்சிவ சிவ நீ (இன்)

ராகம் - கன்னடபியாக் ;  தாளம் - ஆதி.

பல்லவி.

விருதாஜன்மமாச்சே வந்தும் விருதா ஜன்மமாச்சே

அனுபல்லவி.

சதாகாலமும்சந் நிதானத்திலிருந்து நிதானம்பெறாமல் (விருதா)

சரணங்கள்.

முத்தியளித்திடும் மூர்த்தியைக்கண்டு
பத்தியைப்பண்ணிப் பதமடையாமல் (விருதா)

பொற்கழலசையப் பொதுவிலிருந்து
தக்கவராடுந் தன்மையைப்பாராமல் (விருதா)

தில்லைக்கதிபதி தெரிசனங்கொடுத்து
எல்லையில்வாவென் றிரங்கியழைத்தும் (விருதா)

_________