ராகம் - ஜஞ்ஜூடி ; தாளம் -
ஆதி.
பல்லவி.
சந்நிதிவரலாமோ-சுவாமி-தரிசனந்தரலாமோ
(சந்நிதி)
சரணங்கள்.
இல்லறவாழ்வாம்
பனிமூடி
இருந்தேனன்றோ
மிகவாடி
அல்லும்பகலுங்
கொண்டாடி
அறியேன்கனக
சபைநாடிச் (சந்நிதி)
வீதியிலேசற்றே
வந்திருந்தேன்
வேடிக்கைபார்த்துக்கொண்
டிருந்தேன்
சாதியிற்றாழ்ந்தவனென்
றறிந்தேன்
தனித்திருப்போமென்றிங்கே
வந்தேன் (சந்நிதி)
காலால்வீசிக்கனல்
மூட்டிக்
கலைமதிமண்டலமே
லோட்டிப்
பாலாறுபெருகவேயெனைக்
கூட்டிப்
பார்த்ததுமில்லைநான்
தோட்டி (சந்நிதி)
__________
வசனம்.
நந்தனார், தான்கண்ட
சொப்பனத்தைக் கொண்டாடுவார்.
ராகம் - நாதநாமக்ரியை ;
தாளம் - ஆதி.
பல்லவி.
சொப்பனங்கண்டுகொண்டேன்-அதிசய
சொப்பனங்கண்டுகொண்டேன்
|