திருநாளைப்போவார்179நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அனுபல்லவி.

சொப்பனங்கண்டுகொண்டேன் எல்லாங்கற்பனையென்றறிந்தேன்-வேத
தற்பதவாக்கியமேயுருவாகிய வற்புதநடனம்புரிய இன்று (சொ)

சரணங்கள்.

அம்பிகைமணவாளன் மான்மழு வணிந்திடுஞ் செந்தோளன்-செம்பொ
னம்பலந்தனிலாட மத்தளம்போட மறைபாடக் கொண்டாட (சொ)

மண்டலத்தோராசைதீர்ந்து மண்டபமணியோசைநேர்ந்து
மனதுகனிந் துருக மறலி கருக வரந் தருக வருக (சொ)

மங்கையர்மோகநில்லா தாரையும் வருந்தியழைக்கும் பொல்லாதாகிய
மாயப்பிணியைவெல்ல மருந்து சொல்ல வழியிற்செல்ல நல்ல (சொ)

பண்ணவர்முரசடிக்கப் பதஞ்சலி வியாக்கிரர்பதந்துதிக்க-மாயன்கோ
பாலகிருஷ்ணன்களிக்க வுடுக்கையெடுக்கவுலகந் துறக்கச் சிறக்கச் (சொ)

___________

வசனம்.

நந்தனார், தான் கண்ட கனவு நிஜமோ பொய்யோ வென்று சந்தேகப்படுவார்.

ராகம் - சூர்யகாந்தம்  ;  தாளம் - சாபு.

பல்லவி.

கனவோநினைவோ கண்டதுவீணோ

அனுபல்லவி.

மனதிலுறுதிகொள்ள வழியொன்றுங்காணேன் (கனவோ)

சரணங்கள்.

நித்திரைதனிலொரு சித்தனுருவாய்வந்து
முத்திதருவேனென்று நத்திப்பேசினதுண்டு (கனவோ)