திருநாளைப்போவார்18நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

திருப்பார். தன் நினைவுவந்து பரவசந்தெளிந்து ஈசனைப் பணிந்துகொண்டு வந்த பணிவிடை
செலுத்தக் கோவிலார் கேட்கக் கும்பிடுபோட்டுச் சொல்லுவார்.

____________

கண்ணிகள்.

ராகம்-ஆனந்தபைரவி; தாளம்-ரூபகம்.

பல்லவி.

வாரிருக்குதுதோலிருக்குது வாங்கிக்கொள்ளுவீரே-மத்தளங்கள்
பேரிகைக்கும்வீணைக்கும்நல்ல விறுக்கிக்கட்டும்விசை (வாரிருக்)

பேரிருக்குது போதுஞ்சிவன் பெருமையைக்கொண்டாடி-தினமும்
சீருறைகின்றதில்லைப்பதியில் சேருதற்குபாயந்தேட (வாரிருக்)

சிறியவனான்சாதியொன்று மறியாதவனானேழை-சிவ
பெருமானுக்கடியேன்செய்யும் பணிவிடையிது (வாரிருக்)

நொண்டிச்சிந்து.

ராகம்-புன்னாகவராளி;தாளம் - மிச்ர ஏகம்.

செய்யும்பணிவிடைகள்-ஈசன்-சிந்தைமகிழ்ந்துகுளிர்ந்திடவேமத்தளம்
பேரிகைக்கும்-இசை-வார்கொடுத்தப்புறந்தோல்கொடுத்துமறவாமலே
தினமும்-நல்ல-வாசம் பெருகுங் கோரோசனையும்
தேவாலயங்கள் தோறும்-தந்து-சித்தமுருகிய பக்திவெள்ளம்
புரண்டோடிக் கங்குகரை-என்று-பேதமறிய வொண்ணாது கண்டீர்
ஜாதியில் நீசரவர்.

வசனம்.

இப்படி பக்திசெய்யாநின்ற நந்தனாருடைய வரலாறேதென்றால்,