சரணங்கள்.
சொல்லும்பொருளுமற்றுச்
சோதிமயங்கொண்
டல்லும்பகலுமற்ற வம்பலவாணன் (தொண்)
அஷ்டதிசையும்பரி
பூரணமாகவே
மட்டிலாதுவளர்ந் தோங்கியநாதன் (தொண்)
வாசியடங்கிநடு
வணைவழிகண்டால்
தேசிகவடிவுடன் தெரிசனந்தந்திடும் (தொண்)
பாலகிருஷ்ணன்பணிந்
தேத்தியபாதன்
கோலச்சிலம்பணியுங் குண்டலநாதன் (தொண்)
___________
ராகம் - ஹிந்துஸ்தான்
காபி ; தாளம் - ஆதி.
பல்லவி.
திருநாளைப்போவார்
தெரிசனங்காணத்
தில்லைமூவாயிர முனிவர்கள்வருகிறார் (திருநாளை)
சரணங்கள்.
பத்திவெள்ளமது
கரைபுரண்டோடும்
பரமானந்தக் கடல்முழுக்காடும் (திருநாளை)
அரகரசங்கர சிவனென்றுசொல்லும்
அநித்தியசடதுக்க மாயத்தைவெல்லும் (திருநாளை)
அடியவரேமெத்தப்
பெரியவரென்று
அம்பலவாண ரருள்விடைகொண்டு (திருநாளை)
இதுவுமது ; சிந்து.
ராகம் - சௌராஷ்ட்ரம் ;
தாளம் - ஆதி.
பல்லவி.
தேடித்தேடித்திரிந்தார்
பாரும்-நந்தனார்தம்மைத்
தில்லைமூவாயிரவர் யாரும்.
|