எல்லையைக்காணுமுன்னே
யிருள்விலகுமுங்கள்
சொல்லைக்கேட்குமுன்னே துன்பங்கள்தீர்ந்திடும்
(கண்)
கள்ளங்கருகச்செய்யுங்
கண்ணுதலேயுங்கள்
உள்ளங்குடியாய்க்கொண் டாருங்கள்தரிசனம். (கண்)
---------
வசனம்.
நந்தனார், தான்
சின்னஜாதியாயிருந்தபோதிலும் தெய்வ மிரங்கிற்றோவென்று
சந்தோஷங்கொண்டு
சொல்லுகின்றார்.
ராகம்-தன்யாசி ; தாளம் -
ஆதி.
பல்லவி.
எனக்குமிரங்கிற்றோ-நான்மெத்த-ஏழைச்சாதியல்லவோ.
அனுபல்லவி.
தனக்குள்தானாயிருந்
தகிலப்பிரபஞ்சமுந்
தன்னுள்ளடக்கிய பொன்னம்பலவன்கிருபை
(எனக்கு)
சரணங்கள்.
அல்லும்பகலு மருந்தவஞ்செய்கினு
மறியாரொருவரு மம்பலத்தெய்வம் (எனக்கு)
நான்மறைமுடிவும் நானறியேனென்று
வோதியவுண்மையை யுலகமறிந்திட (எனக்கு)
வசனம்.
நந்தனார், என்னதவம்
செய்தேனோ இவ்வுலகின்கண் யாருக்கும் கிடைக்காத
பாக்கியம் தனக்குக் கிடைத்த தென்று
சொல்லுவார்.
|