கண்ணிகள்.
ராகம் - ஆஹிரி ;
தாளம்-மிச்ரஏகம்.
அம்பலவாணனைத் தென்புலியூரானை
நம்பிப்பணிந்
தேனோ -
அர்ச்சனை செய்து
கும்பிட்டிருந்
தேனோ
தில்லைப்பதியில்வந்து எல்லைகடந்தேனென்று
அல்லலறுத்
தேனோ - சஞ்சிதவிதை
யெல்லாம்வறுத்
தேனோ
தாண்டவமாடின ஆண்டவன்சேவடி
வேண்டித்துதித்
தேனோ - முக்குணங்களைத்
தாண்டிக்கதித்
தேனோ
எந்தனெனதென் றெந்தவேளையுமாயுஞ்
சிந்தைநழு
விற்றோ - சேர்ந்தவனென்று
தந்தைதழு
விற்றோ
தெள்ளுதமிழ்ப்பாடி
யுள்ளமுருகியுன்னில்
கள்ளங்கரு
கிற்றோ - கருத்திலெட்டா
வெள்ளம்பெரு
கிற்றோ
ஆசைவலையைப்போட்டு மோசப்படுத்துஞ்சீவ
பாசங்குலைத்
தாரோ - அளவிடாத
கிலேசந்தொலைத்
தாரோ
பெண்ணாரிடுமாலுக் கொண்ணாதெனச்சடைத்
தண்ணால்தணித்
தாரோ -
கருணைபொங்குங்
கண்ணாலணைத்
தாரோ
அடுத்துவந்தவனென்று பிடித்தபேய்களையோட்டி
தடுத்தாளக்கொண்
டாரோ - பரமபதங்
கொடுத்தாளக்கொண் டாரோ.
___________
|