திருநாளைப்போவார்196நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

ஞானசம்பத்தையுடைய தில்லையில்வாழும் பிராமணர்கள் கைகூப்பினார்கள்.
பரவுதற்கரிய மற்றைச் சிவபத்தர்களுந் தொழுது மனத்தில் களிப்படைந்தார்கள். வேதங்கள்
முழங்குகின்ற கனகசபையில் ஆடுகின்ற பாதத்தை வணங்கும் பொருட்டுத் திருநாளைப்
போவாராகிய வேதமுனிவர் தாம் கண்ட ஆனந்தத் தாண்டவத்தை வருணித்துச்
சொல்லுகின்றார்.

-------------.

ராகம்- தேசிகதோடி  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

தாதெய்யென்றாடுவார்-அவர்-தத்தித்தெய்யென்றாடுவார்.

அனுபல்லவி.

ஆதிபராபர மாகியசித்து
ஆனந்தங்கொண்டொரு காலையெடுத்துத் (தாதெய்)

சரணம்.

அண்டசராசர மெங்கும்நடுங்க
ஆதிசேடனார் முடிகணெருங்க (தாதெய்)

சீலம்பெருகிய முனிவர்கொண்டாடத்
திங்களைச்சூடிய செஞ்சடையாடத் (தாதெய்)

பார்புகழுந்தில்லைச் சிதம்பரநாதன்
பாலகிருஷ்ணன்பணிந் தேத்தியபாதன் (தாதெய்)

-----------.