ராகம் - பந்துவராளி ;
தாளம் - ரூபகம்.
பல்லவி.
குஞ்சிதபாதத்தைத்
தாரும்-மன-சஞ்சலபாவத்தைத் தீரும்.
அனுபல்லவி.
செஞ்சிலம்பசையக்
கனகசபைதனில்
ஜெணுதத்தக ஜெணு தத்திமி திமிதத்-தோமென்றாடிய
(குஞ்சித)
சரணங்கள்.
நெஞ்சிற்கவலையை
யாற்றும்- இந்த
வஞ்சப்பிறவியை
மாற்றும் - நாளும்
வஞ்சிசிவகாமிவல்லி
மகிழ்ந்திடும்
தஜ்ஜெம்தக-ஜெம்தரிகட தக்கிட
தோமென்றாடிய (குஞ்சித)
சரணமென்றிங்கேநான்
வந்தேன் -
ஜனன
மரணத்தினால்மிக
நொந்தேன் - அந்தக்
கரணக்கல்மிஷங்கள் போக்கியே காத்திடும்
இந்திரர்வானவர் மாமுனி - வந்து
நிதந் துதிசெய்திடும் (குஞ்சித)
பாலகிருஷ்ணன்றொழும்
பாதா - முத்தி
நால்வர்க்குதவிய
நாதா - எந்தன்
மேலேகிருபைசெய்து வெற்றி யளித்திடும்
அத்தனே கர்த்தனே சுத்தனே
யித்தனை-நிர்த்தனஞ் செய்திடும். (கு)
------,
ராகம் - மாயாமாளவகௌள ;
தாளம் - ரூபகம்.
பல்லவி.
நடனமாடினார் - ஐயர்-
நடனமாடினார்.
|