அனுபல்லவி.
நடனமாடினார்தில்லை நாயகர்பொன்
னம்பலந்தனில்
தாகுஜணுத - தகஜம்தரி-தகஜணு -
தகதிமி -தித்தோம் - தத்தாளங்கு
தகதளாங்கு - தகதிக -
ததிங்கிணதோமென்று (நட)
சரணங்கள்.
முக்திமடைந்தை
சித்திக்கச் சித்திக்க
மோகவலைகள் பத்திக்கப்
பத்திக்க
பத்தர்கள்மனது திக்திக்கத்
திக்திக்கப்
பாதச்சிலம்பு சத்திக்கச்
சத்திக்கப்
பனிமதி சடையாடப்
பதஞ்சலிமாமுனி மறைபாடப்
பண்ணவர்கள் கொண்டாடப்
பலகிருஷ்ணன் மத்தளம்போட (நட)
________
ராகம் - வஸந்த ; தாளம் - அட.
பல்லவி.
நடனமாடினார்-வெகுநாகரீகமாகவே
கனகசபையில் ஆனந்த (நடன)
அனுபல்லவி.
வடகைலையில்முன்னாள்
மாமுனிக்கருள்செய்தபடி
தவறாமல்தில்லைப்பதியில்வந்து
தைமாசத்தில் குருபூசத்தில் பகல்நேரத்தில்
(நடன)
சரணம்.
அஷ்டதிசையும் கிடுகிடென்று-சேடன்தலைநடுங்க
அண்டமதிரக் கங்கைத்துளிசிதர பொன்னாடவர்கொண்டாட
இஷ்டமுடனேகோபாலகிருஷ்ணன் பாட சடையாட
அரவ படமாட-அதிலேநடமாட-தொந்தோமென்று-பதவிகள்
தந்தோமென்று (நடன)
|