திருநாளைப்போவார்203நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

பார்க்கலாமோபால கிருஷ்ணன்போற்றும்பரனே
பரமதயாநிதியே நின்பக்தியைத்தந்து
சித்தமகிழ்ந்திடக் கரையேற்றிடுவதுன்பாரஞ்
சொன்னேன் கைவிடவேண்டாம் சரணம் சரணம் (உனது)

___________

ராகம்-சக்கரவாகம், மிஸ்ரஜாதி ; தாளம்-ஜம்பை.

பல்லவி.

அறிவுடையோர்பணிந்தேத்தும் தில்லைக்
கனகசபாபதியே எனையாளும் (அறி)

அனுபல்லவி.

மறமுடியுந்தேடி யறியாதவுன்றன்
திருவடியைமாணிக்கவா சகரறிந்ததெப்படி (அறி)

சரணங்கள்.

கனவிலும் நினைவிலும் விஷயாதிசம் சாரக்கடலி
லழுந்திக்கரையேறவும் வழிகாணேன்
மனமிரங்கிக்ருபை செய்திடவேணும்-மாயன்கோபால
கிருஷ்ணன் தொழுதேத்தும்-அம்பலவாணா
உனைமறந்திடப்போமோ -உன்னடியார்களைப்
பணிவீரென்றுரைத்திடுமுண்மையையின்னமுமறியேன்
மனைவிமக்கள் தன தானியமென்றிந்த
மாயவலைக்குள் சிக்கி மயங்கினேன் தயங்கினேன் (அறி)

____________

ராகம் - நவரோஸ் ; தாளம் - ஆதி.

பல்லவி.

தில்லைநடராஜரைப்போலே வேறெதெய்வம்கிடைக்குமோ