திருநாளைப்போவார்205நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

பந்திபந்தியா            யமரர்கொண்டாடக்
கோபாலகிருஷ்ணன்      மத்தளம்போட (கனக)

__________

ராகம் - பூர்ணசந்த்ரிக ; தாளம் - ஆதி

பல்லவி.

பாதமேதுணை       ஐயனே-நின்
பாதமேதுணை       ஐயனே.

அனுபல்லவி.

பாதமேதுணை யல்லால்       வேறொரு
சேதிகளு நானறிந்             திலேன் (பாத)

சரணம்.

பாலனுக்கருள்      செய்த பராபரன்
பாலகிருஷ்ணன்     கவிக்குத்தயாகரன்
சீலமுள்ள சிவ     காமி மனோகரன்
கோல நடம்புரி     ரஞ்சித குஞ்சித (பாத)

__________

ராகம்- ஸரஸ்வதிமனோஹரி ; தாளம் - ஆதி.

பல்லவி.

வந்தாலும் வரட்டும்-ஜனனம்
தந்தாலும் தரட்டும்-சாமி.

அனுபல்லவி.

செந்தாமரைப்பதமே         கதிநம்பினேன்
சிதம்பரநாதன்              சிவசாயுச்சியம். (வந்தா)