திருநாளைப்போவார்206நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணம்.

சிவன்செயலன்றி         வேறொருசெயலும்
சிந்தையிலறியேன்       பாலகிருஷ்ணன்தொழும்
அவனுருவன்றி           வேறுருவுண்டோ
ஆகமமறியாதோ,
தவமேவுந்தென்          புலியூர்வாழும்
தாண்டவனேயென்        னாண்டவனே-இந்தப்
பவக்கடல்தாண்ட        விடுவாயதுவொரு
பாரமல்லவெகு          தூரமல்லமுக்தி (வந்தா)

ராகம் - ஆரபி ; தாளம் - ஆதி.

பல்லவி.

பிறவாத வரந்தாரும் - என்னையா
பிறவாத வரந்தாரும்.

அனுபல்லவி.

அறிவுடையோர்தொழு தேத்தியதில்லைப்பொன்
னம்பலவாயின் னம்பலயோனியில் (பிற)

சரணம்.

எண்பத்துநாலு லட்சம் ராசிகளில்
எடுத்தெடுத்துப்பிறந் திறந்ததோ
புண்பட்டதுபோதும்போதும்-இனிமேல்
புத்திதெரிந்ததையே
நண்பற்றிடுமனைவி மக்கள்வாழ்வினில்
நாள்கடோறும்மனவி லாசம்கழிந்ததும்
இன்பத்துடனேகோ பாலகிருஷ்ணன்தொழு
தேத்திய ஜக தீசனே நடராஜனே. (பிற)

___________