திருநாளைப்போவார்21நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அவர்கள்- சேரியிலுள்ள சீரிதுவென்றார்.

நந்தன் - வந்தபுலையருக்குப் பக்திபெருகவே
          நெற்றியில்திரு நீறையுமிட்டார்.

அவர்கள்- சத்தியந்தானென்று மெத்தவுங் கும்பிட்டு
            பிரியமுடனவர் பின்னையும் சென்றார்.

ராகம்-வராளி; தாளம்-சாபு.

இவர்- சிங்காரமான பள்ளு பாடினார்
அவர்-
அங்கங்குளிர்ந்து கொண் டாடினார்
இவர்
- கோரோசனைப் பையை யெடுத்தார்
அவர்
- தாராளமாய் வாரிக் கொடுத்தார்
இவர்
- சிவமந் திரஞ்சொல்லிச் சேவித்தார்
அவர்
- தவமிஃதே யென்றுச் சரித்தார்
இவர்
- ஆசைப் பெருங்கடல் தாண்டினார்
அவர்
- ஓசைப் படாமலே வேண்டினார்
இவர்
- அளவில்லா தானந்த மடைந்தார்
அவர்
- அளவில்லாக் காக்ஷி பெற்றிருந்தார்
இவர்
- திருப்புன்கூ ரீசனைப் பாடினார்
அவர்
- விருப்பமோ டிவரைக்கொண் டாடினார்.

____________

வசனம்.

இப்படி எல்லோரும் கூடிச் சிவனை அடிக்கடி வணங்கி ஹரஹரா வென்றுரைத்திடும்
சப்தம் பரமனேயறிவார். இப்படி நந்தனார் பதினொருபேர் பறையரோடு திருப்புன்கூர்
வந்து சேர்ந்தார்.