மங்களம்.
ராகம் - அசாவேரி ; தாளம் - ஆதி.
பல்லவி.
திருநாளைப்போவாருக்கு
ஜயமங்களம்-எங்கள்
தில்லைமூவாயிரவர்க்குச்
சுபமங்களம்
அனுபல்லவி.
இருடிகளிதுவரி தரிததிசயமென
விருகரமுடிமிசை மருவத்துதிசெய்கன
பரவுமும்பர்சம்பிரமங்கள் துதித்திடும்
பரமனாடுமம்பலத்தில் கதித்திடும் (திருநா)
சரணங்கள்.
திருவாசகமுந்திருக்
கோவைபாடினவர்க்கும்
சீர்காழியிலுதித்த சிறந்தசம்பந்தருக்கும்
ஒருமாதிடத்திற்றூதுக் குவந்துவிடுத்தவர்க்கும்
ஒருவரொப்பில்லாத் திருநாவுக்கரசருக்கும்
உரியமறைக்கு-முயர்கலைகட்கும்
உரகர்பதிக்கு-முவணபதிக்கும்
ஓதுசந்திரசூரியர் முனிவர்களுக்கும்
தீதிலாதபாவலர் முதலனைவர்க்கும்.
(திருநா)
திருநாளைப்போவாரென்னும்
நந்தனார் சரித்திரக்
கீர்த்தனை
முற்றிற்று.
|