என்னவினைசெய்தேனோ
கண்பெற்ற பாவந்தானோ
இதயத்தில்மகிழ்ச்சி பூணேனே.
____________
சவாயி.
ராகம் - கேதாரம்; தாளம்-மிச்ர
ஏகம்.
சிவலோகநாதன் திருச்சந்நிதானம்
மலையாகியநந்தி மறைத்திடுதிங்கே
பலகாலஞ்செய்த பாழ்வினைகுவிந்து
மலையாகியிப்படி மறைத்ததோவென்றார்.
வசனம்.
என்று சொல்லிய நந்தனார் பின்னுஞ்
சொல்லுகின்றார்.
ராகம் - தேசிகதோடி; தாளம்-ஆதி.
பல்லவி.
*வழிமறைத்திருக்குதே
மலைபோலே
ஒரு மாடுபடுத்திருக்குதே. (வழி)
அனுபல்லவி.
பாவிப்பறையனிந்த வூரில்வந்து
மிவன்
பாவந்தீரேனோ உன்தன்
பாதத்தில் சேரேனோ ஏறேனோ
சிவலோகநாதா மாடு (வழி)
* இந்தக் கீர்த்தனையை நவீனர்கள் “மாயாமாளவ கௌள” ராகத்திலும்
பாடுகிறார்கள்.
|