திருநாளைப்போவார்28நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

தரிசனம் பண்ணியபின்பு கொண்டுவந்த பணிவிடை செலுத்தி அவ்வீதியில்
மட்டையூறுங் குட்டையை குளமாய் வெட்டவேணுமென்று விசாரமுற்றார். சுவாமி
இதையறிந்து நாளைப்போவாராலே குளம்வெட்ட தாளப்போகாதென்று தன் பிள்ளையை
ஆளாகப் போகச்சொன்னார்.

இருச்சொல்லலங்காரம்.

மாளாப் பிறவிபோக்கும் பிள்ளையார் வந்தார்.

நாளைப்போவார்- நீ-யாரப்பா வென்றார்
      பிள்ளையார்
- நான்உன்-னாளப்பா வந்தே னென்றார்
நாளைப்போவார்
- குட்டையைக் குளமாய் வெட்டுவே னென்றார்
      பிள்ளையார்
- வெட்டினால் மிகு புண்ய மென்றார்
நாளைப்போவார் - அதெம்மட்டு மெட்டு மென்றார்
      பிள்ளையார்
- குளம்வெட்டும் வெட்டு மென்றார்
நாளைப்போவார்
- அற்பமாய் பதக்கு நெல்லைக் கொடுத்தார்
      பிள்ளையார்
- அப்பனேயிது போதும் போதுமென் றுரைத்தார்
நாளைப்போவார்
- களித்து நிர்விகற்பமா யிருந்தார்
      பிள்ளையார்
- குளத்தை வெட்டுதற் கிசைந்தார்

ராகம் - மோகனம்; தாளம் - ஆதி.

பல்லவி.

தடாகமொன்றுண்டாக்கினார்-கணநாயகர்
தடாகமொன்றுண்டாக்கினார்

அனுபல்லவி.

சடாமகுடதரன்-சாம்பவி யுடன்வர
     சகலமுனிவர்மனத்-தாமரை யுமலர