திருநாளைப்போவார்33நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சக்திக்கிணையான                பாதம் - வேத
    சாஸ்த்ரங்கள் நாலுந் தேடிய   பாதம் (காணா)

காலனைச்சீறிய                  பாதம் - சன
    காதிகளுக்குள்ளே செலுத்திய  பாதம்
மாலயன்தேடிய                  பாதம் - எங்கள்
    மாணிக்கவாசகர் பீடிகை       பாதம் (காணா)

ஆசையைப்போக்கிய             பாதம் - பர
   மானந்தவெள்ளத்தி லாடிய     பாதம்
வாசம்பொருந்திய                பாதம் - தில்லை
   மாகாளிதாழவே தூக்கிய       பாதம் (காணா)

பாலகிருஷ்ணன்தொழும்           பாதம் - காட்டில்
    பாம்புபுலிக்குக்கூத் தாடிய     பாதம்
கோலச்சிலம்பணி                 பாதம் - தில்லைக்
    கோவிந்தராயர் தரிசிக்கும்     பாதம் (காணா)

__________

வசனம்.

நந்தனார் சிவனைக் காணாமல் காலம் வீணாகப் போக்க லாகாதென்று தம்
இனத்தாரைக் கூப்பிடுகின்றார்.

துக்கடா.

ராகம்-பியாகு; தாளம்-ரூபகம்.

பல்லவி.

ஊஎல்லோரும் வாருங்கள்
சுகமிருக்குது பாருங்கள் நீங்கள் (எல்லோரும்)

ஊ இந்தக் கீர்த்தனையை நவீனர்கள் “கேதார” ராகம் “ஆதி” தாளத்திலும் பாடுகிறார்கள்.