இருசொல்லலங்கார வாக்குவாதம்.
நந்தனார் - தில்லையம்பலமென்று
சொல்லச்சொன்னார்
புலையர் - கள்ளப்பேச்சென்று
மெள்ளச்சொன்னார்
நந்தனார் - சங்கராவென்று
சொல்லச்சொன்னார்
புலையர் - இங்கேவாவென்று நிற்கச்சொன்னார்
நந்தனார் - சற்றேயாகிலும்சிவனை
த்யானம்பண்ணென்றார்
புலையர் - நத்தையோடுபாலை பானம்பண்ணென்றார்
நந்தனார் - திருச்சிற்றம்பலமென்று
ஜபிக்கச்சொன்னார்
புலையர் - வெறுச்சகம்பளமென்று உறக்கச்சொன்னார்
நந்தனார் - சேரியில் நல்லகாரியமீதென்றார்
புலையர் - ஏரியில் நல்லமாரியீதென்றார்
நந்தனார் - விட்டநாள்நினையாம
லெட்டுநாள் மறவாமல்
நிஷ்டை
பண்ணாதசென்மம் நஷ்ட மென்றார்
புலையர் - விட்டவிரை முளையாமல்
நட்டபயிர் பலியாமல்
கெட்டுதானால் கிராமம் நஷ்ட
மென்றார்
நந்தனார் - உங்கள் புலைத்தன்மை
போகுமென்றார்
புலையர் - எங்களைக் கெடுத்தாயே பாவியென்றார்
நந்தனார் - தேவாதிதேவனை தரிசிப்பீரென்றார்
புலையர் - பாவாடைராயனைப் பாவிப்பாயென்றார்
நந்தனார் - அனைத்தாளுமீசனுக்
கன்புசெய்யென்றார்
புலையர் - இனத்தாரைநொந்தவர்க் கின்பமேதென்றார்
நந்தனார் - தினமும்சிவனைப்போற்றிக்
களிப்போமென்றார்
புலையர் - பதரைத்தூற்றிநெல்லை யளப்போமென்றார்
நந்தனார் - பெண்ணாசைபொன்னாசை
விடுதலேநன்றாம்
புலையர் - என்னாளுமுன்னாலே கெடுதலையுண்டாம்
நந்தனார் - அப்பனோடு இஷ்டமுட
நானிருப்பேனென்றார்
புலையர் - கப்பலோட்டியகடன் கொட்டைநூற்றால்தீராதென்றார்
|