இருசொல்லலங்காரம்.
கண்ணிகள்.
ராகம்-பூரிகல்யாணி; தாளம்-ஏகம்.
நந்தனார் - சிவனேதெய்வம் சிதம்பரமேகைலாசம்
தவமேபெருமை தான்சம்ப்ரதாயம்
புலையர் - சேரியேசொர்க்கம்
ஏரியேகைலாசம்
மாரியேதெய்வம் மதசம்ப்ரதாயம்
நந்தனார் - படிப்பதுஞானம்
பார்ப்பதுமூலம்
குடிப்பதுமதிப்பால் குலசம்ப்ரதாயம்
புலையர் - பிடிப்பதுநண்டு
புசிப்பதுஇறைச்சி
குடிப்பதுகள்ளு குலசம்ப்ரதாயம்.
நந்தனார் - பாழைக்கடப்பார்
பரவெளிதாண்டி
கோழையறுப்பார் குலசம்ப்ரதாயம்
புலையர் - ஆழத்தில்குளிப்போம்
அருங்கோடைவந்தால்
கூழைக்குடிப்போம் குலசம்ப்ரதாயம்
நந்தனார் - ஆசையைப்போக்கி
ஐம்புலனைச்சுட்டு
மாசற்றவாழ்வு மதசம்ப்ரதாயம்
புலையர் - பூசைகள்புரிவோம்
பொன்னேருழுவோம்
கூசாமல்வாழ்வோம்
குலசம்ப்ரதாயம்
நந்தனார் - மையத்திலாடி மனக்கயிறுபூட்டி
வையத்திலிருப்பார்
மதசம்ப்ரதாயம்
புலையர் - கையிலேகலையம்
காலிலேசேறு
பையிலேபாக்கு பறைசம்ப்ரதாயம்.
____________
|