வசனம்.
சிவபக்தி பண்ணினால்
அணிமாவாதிசித்திகள் அடையலாமென்று நந்தனார்
சொல்லுகின்றார்:
ராகம்-நீலாம்பரி ; தாளம்-ஜம்பை.
பல்லவி.
வாருங்கள் வாருங்கள்
சொன்னேன்-நீங்கள்
வாயாடா தோடி வருவீரென் முன்னே
சரணம்.
நந்தனார் - அஷ்டமா
சித்திகளைப் பெறலாந்-தில்லையில்
ஆனந்தத் தாண்டவன் கோவிலைக் கண்டு
இஷ்டமுடன்
வீதி வலம்வந்து-ஈசன்
இணையடி தொழுதார்க் கினிப்பிறப்பில்லை.
(வாருங்கள்)
புலையர் - கருமணி பிச்சோலை
போதும்-உன் தன்
கள்ளவேஷ மெங்களுக்குக் கிடையாது
பருகுவது
கூழ்க்கஞ்சி போதும்-வாய்
பதறி வார்த்தைகள்பேசிப் பசப்பாதே போடா.
______________
வசனம்.
நந்தனாரைப் பார்த்துப் பறையர்,
“நீ சொன்படி கேட்பதில்லை; எங்கள்
உண்மையறியாமல்
நீ மயங்காதே” யென்று சொல்லுகிறார்கள்:
ஏசல்.
புலையர் - பார்ப்பார தெய்வமது
பலிக்காது பறையரைக்
காப்பாற்ற மாட்டாது கைவிடு மென்றார்
|