திருநாளைப்போவார்39நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

நந்தனார் - பார்ப்பார் பறையறென்று பாராது பரிதிபோல்
            காப்பாற்று மல்லவோ கண்ணுதலே யென்றார்

புலையர் - அடுக்காத வார்த்தையை அல்லும்பக லோதியே
            பிடிக்கிறாய் பிடிவாதம் பேசாதே யென்றார்

நந்தனார் - கடுக்காயைத் தின்பாரோ கன்ன லதுபோலே
            கொடுக்காத தானாலும் கொள்ளுவீ ரென்றார்

புலையர் - பித்தனென்று சொல்லுவார் பேருலகி லெல்லோருஞ்
            சத்யமி தல்லவோ தள்ளுவீ ரென்றார்

நந்தனார் - பித்தனா யிருந்தாலும் பிறவியறுத் தனைவர்க்கும்
            முக்தி கொடுக்கும்நல்ல மூர்த்தியவ ரென்றார்

புலையர் - இத்தனைநாளு மிங்கே இல்லாத வார்த்தையை
            கற்றுவந்து மென்ன கார்யமோ வென்றார்

நந்தனார் - இத்தனை நாட்சென்று ஈசனடித் தாமரை
            பக்தி செய்யவரும் பாக்கியமீ தென்றார்.

____________

அகவல்.

பாக்கிய மீதென்று பரமசிவ பக்தி
மார்க்கங்க ளொல்லாம் வரிசையாய்த் திரட்டி
எடுத்துரை செய்வார் ஈனமாஞ் சாதி
பிடித்தறி யாமல் பேசுவா ரன்றோ.

விருத்தம்.

புலையர் - வக்கணைக்காரா நந்தா வாய்படப் பேச வேண்டாம்
            சர்க்கரைபோலே பேசி சாதித்துக் கண்ட தென்ன

நந்தனார் - பக்குவ காலம் வந்தால் பரமனார் திருநாமந் தான்
            சர்க்கரை போலே தோன்றும் சாதிப்பார் முக்தி தானே.