திருநாளைப்போவார்40நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

புலையர்களனேகரானபடியால் பலவிதமாகச் சொல்லுகிறார்கள்.

ஏசல்.

ராகம்-புன்னாகவராளி ; தாளம்-ரூபகம்.

புலையர் - ஆண்டிப்பரதேசி யரகரவென்றவர்
            வேண்டுந்தெய்வமது விளங்காது என்றார்

நந்தனார் - மூன்றுலகுக்கிறை முன்னின்று கைகூப்பி
            ஆண்டவனேயென்று அர்ச்சிக்கு மென்றார்

வேறொரு நாத்தைப்பிடுங்கியே நடவுநட்டாலிந்த
புலையர்
சோற்றுக்கவலைவிடும் சுகமிது வென்றார்

நந்தனார் - கூற்றுவனார்வந்து கூப்பிடும்வேளையில்
            மாத்திரைப்பொழுதில்லை மன்னுயி ரென்றார்

வேறொரு மாமனார்மக்களும் வாழ்கின்றவிடத்திலே
புலையர்
யானாலுமெப்போது மழுமூஞ்சி யென்றார்

நந்தனார் - தேனாகவேமெத்தத் தித்திக்கும்சிவஸ்துதி
            யானாலுமுங்களுக் கழுகையோ வென்றார்

வேறொரு மூக்குநுனியைப்பார்த்து முணுமுணுத்தென்னேரம்
புலையர்
காக்கைபோலசும்மா கதறுகிறீ ரென்றார்.

நந்தனார் - வாக்கிலேசிவநாமம் வாராதபாவிகள்
நாக்கிலேவூசியை நாட்டுவே னென்றார்

வேறொரு மடவாயின்பறவைபோல் பதியாமலிருக்கிறீர்
புலையர்
துடைகாலிநீயென்று சொல்லுவே னென்றார்

நந்தனார் - விடையேறுமீசனை வெட்டவெளியிலுன்னி
            அடையாளங்காணாத ஆடுக ளென்றார்

வேறொரு மறையோதத்தெரியாத மடையராய்ப் பூமியில்
புலையர்
குறையாதபுலைத்தன்மை கொண்டோமே யென்றார்