திருநாளைப்போவார்42நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

அவர்களில் ஒரு புலையர், “எப்போதுஞ் சிவனைக் கொண்டாடினால் நம்முடைய
தொழிலுக்குக் கெடுதலுண்டு; பண்ணை விளையா” தென்று சொல்ல, நந்தனார் அதற்குச்
சொல்லுகின்றார்:

தண்டகம்.

ராகம்-பூர்வகல்யாணி ; தாளம்-ஏகம்.

அரகராவென்றொரு குழிநட்டால் அதுகலமே விளையும்
     பாவம்-தங்காமற் றொலையும்
சிவசிவாவென்று ஒருதரஞ்சொன்னால் ஜன்மசபலமாச்சு
     புண்ணியகரும மதுவே யாச்சு
தில்லையம்பலத் தெரிசனங்கண்டால் தேவரும்வருந்தாரோ
     அந்த - மூவரும்பொருந் தாரோ
அடிமைக்காரத்தொழில் செய்வது துன்பமானாலுமேச்சே
     ஜன்மம்-போனாலும் போச்சே

_________

வசனம்.

நந்தனார் புலையர்களைப் பார்த்து, அனேகவிதமாய்ச் சொல்லி
நாளைப்போவேனென்று சொல்லுகின்றார்:

நொண்டிச்சிந்து.

ராகம்-புன்னாகவராளி ; தாளம்-மிச்ர ஏகம்.

நாளைப்போவேனென்றாராம்-அங்கே-நாடும்பறையர்க ளோ
டிவந்து, அண்ணே நீ போகாதே-நமக் காண்டை பொல்
லாதவன் வேண்டிக்கொள்ளான், பார்ப்பாரச் சாதியுண்டே.