திருநாளைப்போவார்45நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஊரிலெங்குமது               முழக்கம்-வெகு
     உறுதியாச்சுது           ஒழுக்கம்-இது (ஞாய)

சிதம்பரமென்கிற              பேச்சு-நாங்கள்
     செய்திடுங்காரியம்       போச்சு-அது
மதம்பிடித்ததுபோ             லாச்சு-இந்த
     மண்டலப்பறையருக்      கேச்சு-இது (ஞாய)

பறையருக்கேதுதைப்          பூசம்-அதைப்
     பார்க்கவேயுனக்கு        விச்வாசம்-சிறு
பயல்களுக்கேயுப             தேசம்-நீர்
     பண்ணிவைத்ததெல்லாம்  மோசம்-இது (ஞாய)

வசனம்.

அவன் சேரியில் பெரிய கிழவனானபடியாலும் சாதி வழக்கங்களெல்லாம்
அறிந்தவனாதலாலும் நந்தனாருக்கு இன்னமும் சொல்லுகிறான்:

நொண்டிச்சிந்து.

ராகம்-புன்னாகவராளி ; தாளம்-மிச்ர ஏகம்.

பார்ப்பாரச்சாதியுண்டே-என்ன-பாடுபடுமுழுக்காடுமங்கே
நமக்குந்திருநாளோ-அந்த-ஞாயமுண்டோ என்னமாயமிது
வென்றேதடைசெய்தான்-சிவன்-வேடிக்கை தானென்று நாடிக்கொண்டே
அறியாதுபோலிருந்தார்.

பெரியகிழவன் சொல்லியது.

விருத்தம்.

கழனியைத் தெய்வமெனச் சுற்றிவந்து தலைவணங்கிக் கரங் குவித்து
உழுதுபரம் படித்துவிரை தெளித்துமுளை கொள்ளநீ ரோட விட்டுப்