திருநாளைப்போவார்46நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

பழுதறவே நட்டதனைக் களைபிடிங்கி மடைதிறந்து நீர்பாயவிட்டுச்
செழித்திடவே பொங்கலிட்டுக் காத்தவரா யனைவேண்டுஞ் செய்கைதானே.

ராகம்-நாதநாமக்கிரியை ; தாளம்-ஆதி.

பல்லவி.

*சுவாமி தரிசனம் நமக்குண்டோ புலைச்
 சாதியன்றோவந்த நீதியறியாமல்.

அனுபல்லவி.

பூமிதெரிசனம் போதும் போதும் வெகு
புண்ணியமே சோறுபோடுமின்ன மொரு (சுவாமி)

சரணங்கள்.

நாத்து நரம்புகளைச்-சுமப்பதும் உழுவதும்
நஞ்சை வயலைச்சுற்றி-வருவதும் வளம்பெற
பாத்தி கட்டிவிரை-தெளிப்பதும் பறிப்பதும்
பாயுமடையைத் திறந்-திடுவதும் அன்றியில் (சுவாமி)

சேரியிடையில் குடி-யிருப்பதும் பதறுகள்
சிதறத் தூற்றிநெல்-லளப்பதும் பார்ப்பதும்
ஊரை வளைந்து தமுக்-கடிப்பதும் மதுக்குடம்
உண்டு களித்துநா-முறங்குவ தன்றியில் (சுவாமி)

ஆண்டை மார்களிடும்-பணிவிடை செய்வதும்
அருகில் நின்றுகும்-பிடுவதும் நடுவதுந்
தாண்டி நடந்துகோல்-பிடிப்பது மளப்பதும்
தனித்துச் சுடலைதினங்-காப்பது மன்றியில். (சுவாமி)

* இந்தக் கீர்த்தனையை நவீனர்கள் “ஆனந்தபைரவி” ராகத்திலும் பாடுகிறார்கள்.