திருநாளைப்போவார்53நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

நந்தனார் - சொல்லினுமடங்காத சோதிபரமானந்தத்
            தில்லைநாயகரைத் தேவரறியாரோ வென்றார்

புலையர் - முண்டாசு கட்டிவரும் நொண்டிவீரப்பனைக்
            கொண்டாடிப்பூசைகளைக் கொள்ளுவீ ரென்றார்

நந்தனார் - அண்டங்கள் பதினாலுக் கப்பாலுமிப்பாலும்
            நின்றார்க்குமுண்டாசு நிலையாது என்றார்

புலையர் - கச்சையரிவாள்வைத்த கறுப்பண்ணசாமியை
            இச்சையுடன்வேண்டி என்தெய்வ மென்றார்

நந்தனார் - பச்சிலைபிடுங்கியே பாதத்தில்சாற்றினால்
            இச்சையானதுமீயும் என்தெய்வ மென்றார்

புலையர் - நேயமறிகோழியு நிணமூன்றுசாவலும்
            தீயகள்ளும்வைத்துத் தரிசித்து நின்றார்

நந்தனார் - வாயாலேசிவமென்று வருந்தினாலெப்போதும்
            தாயரைப்போலவே தழுவிவரு மென்றார்

புலையர் - பித்துப்பிடித்திருக்கும் பேயனாம்நந்தனுக்கு
            சித்தந்தெளிந்திடவே செய்தருள்வீ ரென்றார்

நந்தனார் - பக்திவெள்ளம்பெருகிப் பாய்ந்தாலுஞ்சேரியில்
            நத்தையுறுஞ்சுஞ்சாதி நாடாது என்றார்

___________

வசனம்.

இவ்வகைப் பூசைபோட்டுத் தெய்வங்களைக் கொண்டாடும் புலையர்களைப் பார்த்து
நந்தனார் சொல்லுகின்றார்.

ராகம்-தோடி; தாளம்-ஆதி.

பல்லவி.

பக்திசெய்குவீரே-நடேசனைப் - பக்திசெய்குவீரே.