திருநாளைப்போவார்56நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கட்கா.

அரகரசிவசிவ அம்பல          வாணா
தில்லையம்பல தேசிக          நாதா
புரமூன்றெரித்த பொன்னம்       பலனே
கரியுரிபோர்த்த கருணா          கரனே
அனுதினமன்று ளாடிய           பாதா
பிழைபொறுத்தாளும் புண்ணியம்  தாதா

வசனம்.

மூடப்புலையர்களுக்குப் புத்திவருமாவென்று நந்தனாரிப்படிச் சொல்ல யாவரும்
தொழுதார்கள்.

ராகம்-எதுகுலகாம்போதி; தாளம்-ஆதி.

பல்லவி.

பக்திகள்செய்தாரே-பரமசிவனையே-பக்திகள் செய்தாரே.

சரணங்கள்.

பக்திகள்செய்தார் நற்றவம்புரிநந்தன்
சித்தமகிழ்ந்திட வத்தனைபேர்களும் (பக்திகள்)

தொடுப்பான்சிவகதை படிப்பான்பக்தியாய்
எடுப்பான்தடியொன்று அடிப்பானென்றனுதினம் (பக்திகள்)

கல்லாதவனிங்கே செல்லாதவன்நன்றி
யில்லாதவன்வெகு பொல்லாதவனென்றே (பக்திகள்)

_____________

வசனம்.

அந்தச் சேரியிலே புலையர்கள் பக்திசெய்ததால், சேரி சிவலோகம்போல
விளங்கியது. சிலநாளுக்குப் பின்பு புலை