அனுபல்லவி.
பொங்கரவணிந்திடும்
பொன்னம்பலவனை
புந்தியில்நினைவாய்ப் போற்றி சிவனை தினமும்
(சங்கர)
சரணங்கள்.
பாரினிற்பெண்கள்மேற்
கருத்துபோய்ப்
பற்றவொட்டாமலே
திருத்து
பேரின்பஞானத்தை
வருத்து-சுகப்
பெருவெளிநெஞ்சினி லிருத்து
(சங்கர)
நீர்மேற்குமிழியிக்
காயம்-என்றும்
நிலையில்லாவாழ்விது மாயம்
பெரியமாலயன்
நேயம்-பெறப்
பேசுவரீதேயு
பாயம்-சிவ (சங்கர)
மனிதச்செனனத்தில்
தேடு-நல்ல
மாதவத்தோர்களைக்
கூடு
தனிவெளியாமொரு
வீடு-தன்னைத்
தத்துவத்தால்கண்டு
நாடு-சிவ (சங்கர)
வசனம்.
இப்படிச்சொல்லிய
நந்தனாரைநோக்கி மற்றப் புலையர்கள் சொல்லுவார்கள்:
இருவர் வினாவிடை அலங்காரம்.
ராகம்-ஜயஸாவேரி; தாளம்-சாபு.
அவர்கள் - புண்ணாகியவிந்தப்
பிறவிப்பிணிக்குமருந்
துண்ணாமலிருப்பது
உண்மையோ நந்தா
|