சரணங்கள்.
அந்தணமுனிவரு மிந்திரரமரரும்
வந்துபணியுமவர் விந்தைபொற்பாதத்தை (சிந்தனை)
காமனையெரித்தவன்
காலனைஉதைத்தவன்
சோமனைதரித்தவன் தாமரைப்பாதத்தை (சிந்தனை)
தம்புருவணிந்திடுந்
தும்புருநாரத
ரும்பணிந்திடும்பொன் னம்பலவாணனைச் (சிந்தனை)
வெம்பியதும்பிக்
கருளியபாலகிருஷ்
ணன்பணியுந் திருவம்பலநாதனை. (சிந்தனை)
ராகம்-சாமா;தாளம்-ஆதி.
பல்லவி.
தில்லைத்தலமென்று
சொல்லத்தொடங்கினா
லில்லைப்பிறவிப் பிணியும்பாவமும்
அனுபல்லவி.
சொல்லத்தகு மிதுவே
சிவலோகம்
எள்ளத்தனையறஞ் செய்யில் அமோகந் (தில்லை)
சரணங்கள்.
ஆகமவேதபுராணங்கள்
சாஸ்த்ரம்
அருந்தவம்புரிவார்க்கருளிய
பாத்ரம்
ஆலயமாயிரத்தெட்டினி
நேத்ரம்
ஆனந்தத்தாண்டவமாடிய
க்ஷேத்திரம் (தில்லை)
கணத்திலாடுமணிமாவாதிய
சித்தியுங்
கனகத்திலமரும்விண்ணாடர்கள்
வெற்றியும்
|