ராகம்-பியாக்; தாளம்-ஆதி.
பல்லவி.
சேதிசொல்லவந்தோம்-நந்தனார்
சேதிசொல்லவந்தோம்.
அனுபல்லவி.
சாதிமுறைமைதெரியாதவனுமக்குத
வாதவனென்றொருமாதமாய்த்தெரிந்த (சேதி)
சரணங்கள்.
ஏரைப்பிடித்துச்சற்றே
உழுவான்-மன
தேங்கித்தள்ளாடியே
விழுவான்-எங்கள்
சேரியைப்பார்த்தே
யழுவான்-சிவ
சிதம்பரமென்றே
தொழுவான் ஐயே. (சேதி)
நாத்துமுடியைக்கையி
லெடுப்பான்-அதை
நடத்தெரியாமலே
விழிப்பான்-இதைப்
பார்த்திடும்பேர்களைப்
பழிப்பான்-அடே
பாவியென்றெங்களை அடிப்பான்
ஐயே. (சேதி)
உதட்டையசைத்துமுணு
முணுப்பான்-அவன்
ஊணுறக்கத்தையுந்
துறப்பான்-நாங்கள்
அதட்டிப்பேசினா
லடிப்பான்-பொன்
னம்பலவாணனைப்
படிப்பான்-ஐயே. (சேதி)
_________
ராகம்-கமாசு; தாளம்-ஆதி.
பல்லவி.
அடக்கியாளுமையே - அவனை - அடக்கியாளுமையே.
|