அடக்கியாளமாட்டேனோசிங்கக்குட்டி
யல்லவோஅதைச்சொல்லவோ
காளிபூசையவர் போடும்போதுநீயும்
கண்டித்தையாம் மிகதண்டித்தையாம்
கபடமெல்லாம்வெளிப் படுவதாகும்வழி
காட்டுறேனிதைநாட்டுறேன்.
____________
வசனம்.
நந்தனார் சிதம்பரம் போகிறேனென்று
சொல்லுவதால் அந்தணர் கண்டிக்கிறார்:
ராகம்-மோகனம்;தாளம்-ஆதி.
பல்லவி.
பறையாநீசிதம்
பரமென்றுசொல்லப்
படுமோடாபோகப்படுமோடா-அடா (பறையா)
அறியாத்தனமினிசொன்னாலினிமே
லடிப்பேன்கூலியைப்பிடிப்பேன்பாவிப் (பறையா)
சிதம்பரமென்பதை
விடு-கொல்லைச்
சேரடியிலேவந்து
படு-நாத்தைப்
பதத்திற்பிடுங்கினதை
நடு-கறுப்
பண்ணனுக்கேபலி
கொடுத்திடு-அடா. (பறையா)
எப்போதுமொருதடி
பிடி-கையி
லெடுத்துக்கொண்டேதமுக் கடி-உள்ளங்
கற்பனையாய்ப்பள்ளு
படி-உன்தன்
கால்நோகாமலேகாடியைக்குடி-யடா. (பறையா)
|