வாடா-வுன்கூலிமுழுதுந்தர
வோடா-பண்ணைப்பறைச்சிகளுடனே
நாடா-பழனங்கடோறும்நடப்
போடா-இதுவல்லவோபுண்ணியம். (நந்தா)
பாடு-உன்கறுப்புதெய்வத்தைக்கொண்
டாடு-கள்ளுசுள்ளுடன்பூசைகள்
போடு-நெல்விளையும்படிக்குவழி
தேடு-புத்திசொன்னேனிதுதான். (நந்தா)
___________
வசனம்.
வேதியர் நந்தனாரைச் சிதம்பரம்போகாதேயென்று
கண்டித்துச்சொல்லுகின்றார்:
ராகம்-நாதநாமக்கிரியை;
தாளம்-ஆதி.
பல்லவி.
சிதம்பரம்போகாதே-சொன்னேன்-சிதம்பரம்போகாதே.
அனுபல்லவி.
சிதம்பரம்போனால்
ஹிதம்பெறலாமென்று
சேதிசொல்லுவதுன் சாதிக்கடுக்குமோ. (சிதம்)
சரணங்கள்.
கள்ளக்கும்பிடுதனைப்
போடாதே-உன்
கபடமெல்லாமிங்கே காட்டாதே
மெள்ளச்சொல்லடாமுழுமூடாகீழே
தள்ளிவிட்டுவுன்னைத்தகுந்தபடி செய்வேன்.
(சிதம்)
|