நாத்தைப்பிடுங்கிகண்ணி
நடவேணும்-அந்த
நஞ்சைவயலைச்சற்றே யுழவேணும்
பார்த்துப்பரம்படித்துப் பழுதுவராமல்
பாயுஞ்சலம்விட்டுப் பார்த்திடுவாய்
நீ. (சிதம்)
அடிக்கடிமறுத்துநான்
சொல்லவோ-நீ
அடுமைக்காரப்பய லல்லவோ
எடுத்துக்காட்டுவே னிருக்குதுசாதனம்
தடுத்துப்பேசினால் தாடையிலடிப்பேன்.
(சிதம்)
வசனம்.
அந்தணர் கண்டித்துச்சொன்னதால்
நந்தனார் துயரமடைந்து சேரியில்வந்து
சிவனைநினைந்து பக்திபுரிந்து கொண்டாடுகிறார்.
ராகம்-ஹு ஸேனி; தாளம்-ரூபகம்.
பல்லவி.
பக்திபண்ணிக்கொண்டிருந்தால்-முக்திபெறலாமே
அனுபல்லவி.
எத்திசையுமெவ்வுயிர்க்கு
மவ்வுயிராய்நிறைந்திருக்கும்
வஸ்துவென்றுஅம்பலவன் மலரடியே தினந்தோறும்
(பக்தி)
சரணங்கள்.
கட்டழகிச்சோரனிடங்
காதலது
போலே
கடுகிவருங்கன்றருகில் கபிலையது
போலே
கட்டவரைத்துணிகிடையா கசடனொரு
காலே
காவலனார்பதம்வருகில்
களிப்பதனைப்
போலே
கண்டுமுறைகீழகலக்கண்டறியார் மதுமயக்கங்
கற்பனையாமிப்பிரபஞ்சஞ்சொற்பனம்போலொப்பிமிகும்
(பக்தி)
|