தாயடிக்கில்பால்குடிக்கத்
தழுவுதல்திருஷ் டாந்தம்
சடலம்பொறுக்காமல்துயர்தருகிலு
மேகாந்தம்
ஆயிருந்துவழுத்திலிந்தமாயையுப சாந்தம்
ஆகுமென்றுசாதனங்கள்வழங்குது வேதாந்தம்
காயஞ்சனிக்காதிருக்கக் கண்டுகொள்ளவேணுமென்றால்
காசுபணம்பாசமது மாசறவே நேசமுடன்
(பக்தி)
பச்சைமரத்தாணிபோலேபதிந்துமனம்
நாடி
பாலகிருஷ்ணன்பணியும்பொன்னம்
பலனைக்கொண் டாடி
இச்சையொழிந்தைம்புலன்க
ளைம்பொறிகள் வாடி
ஏகாந்தமானபரி பூரணத்தைத் தேடி
அச்சமறந்திருவிழியி லானந்தநீர்கரை
புரள
அரனேதிரிபுரனேகங்கா தரனேபராபரனே
யென்று (பக்தி)
__________
வசனம்.
சேரியில் சிவபக்தி
பண்ணிக் கொண்டிருக்கின்ற பன்னிருபேர்களுடன்
நந்தனாருமிருந்து பக்திபண்ணும்நாளையில் ஒருநாள்
நந்தனார் பன்னிருவருடைய பக்தி
திடப்பட்டதோ இல்லையோவென்று அறியப் பரிட்சைபார்த்தார்.
இருசொல் லலங்காரம்.
நந்தனார் - சிவதலத்தில் சிதம்பரமேகாட்சி
யென்றார்
அவர்கள் - அவித்தைகளைத் தூண்டிநிற்றல்ஆட்சி
யென்றார்
நந்தனார் - சிற்சபையின்மகிமையென்னசெப்பு
மென்றார்
அவர்கள் - அச்சுதனுங்காணாவானந்த
மென்றார்
நந்தனார் - ஆகையினாலென்ன
பலனாகு மென்றார்
அவர்கள் - நாக்கதினாற்சிவநாமம்
நவிலுவோ மென்றார்
|