ராகம்-ஜஞ்ஜூடி ; தாளம்-ஆதி.
பல்லவி.
பாடுவாய்மனமே-சிவனைக்கொண்-டாடுவாய்தினமே.
சரணங்கள்.
இந்திரன்முதலிய
இமையவர்கதிகார
நந்தியின்மீதேறும் நம்பன்பதம்போற்றி
(பாடுவாய்)
ஆலமுண்டேய மரரைக்காத்ததிரு
நீலகண்டன்கழல் நெறியுடன்போற்றி
(பாடுவாய்)
சீலமாதவர் சித்தம்நின்றாடுஞ்
சூலபாணியெனுஞ்
சுயம்புதாள்போற்றி (பாடுவாய்)
மோகமாம்துன்பம்
மூழ்கிக்கெடாமல்
ஆகமமுறையாய் அந்திவண்ணனைப்
(பாடுவாய்)
பஞ்சாக்ஷரந்தனைப்
பக்தியாயுருவேற்றி
மெய்ஞ்ஞானம் பெற்றுய்யமேலோனை நீபோற்றி (பாடுவாய்)
ராகம்-தோடி;தாளம்-ஆதி.
பல்லவி.
சிதம்பரமேநினை மனமே-முக்தி-பதம்பெறலாகும்மனமே
அனுபல்லவி.
சதம்சதம்மெனும்பொருள்
பதம்பதம்வினை
மருள்
சமரசநடம்புரி சாமிசிதம்பர நிமலன்திருவுரு
நீகொள்ளரகர (சிதம்)
சரணங்கள்.
ஒழியாக்கவலைகொண்டு
விழலாய் ஆனாய்
உண்மையில்லாவீட்டை நிழலாய்
|