திருநாளைப்போவார்82நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

விருத்தம்.

வேதியரே பெரியவரே நல்லவரே நான்கடையன் விண்ணோர் மெச்சும்
சாதியரே பலகலையுங் கற்றுணர்ந்து புரையில்லாத் தவமே செய்யும்
போதியரே புத்தியிலா யான்புலைய னேதறியேன் புண்ய மூர்த்தி
ஆதிகுரு சிதம்பரத்தைக் காணவென்றேயாசைகொண்டேனனுப்புவீரே

ராகம்-ஆரபி; தாளம்-ஆதி.

பல்லவி.

தில்லைச்சிதம்பரத்தை யொருதரமாகிலுந்
தெரிசித்துவாவென்றுத் தாரந்தாருமையே

அனுபல்லவி.

தில்லைச்சிதம்பரத்தைக் கண்டால்பிறவிப்பிணி
இல்லையென்றுபெரியோர் சொல்லக்கேட்டிருக்கிறேன் (தில்)

அல்லலறுக்குந்திரு வம்பலநாயகன்
அல்லும்பகலுமாடி யானந்தம்பெருகிய (தில்)

ஆதிமுதலாயென்னை யடிமைகொண்டதல்லவோ
வேதகுலமேயென்தன் மீதில்தயவுசெய்து. (தில்)

ராகம்-நாதநாமக்ரியை; தாளம்-மிச்ர ஏகம்.

பல்லவி.

தெரிசிக்கவேணுஞ்-சிதம்பரத்தைத்-தெரிசிக்கவேணும்.

அனுபல்லவி.

தெரிசித்தவுடனுடல் கரிசைப்பிணிகளறும்
பரிசுத்தமாகுமுன் மறுசுத்தமாறவே. (தெரிசிக்க)

சரணங்கள்.

பத்தர்பணியுந்திருக் கூத்தன்சந்நிதிதொழு
தேத்திப்பிறவித்துய ராத்தியெப்போதும் (தெரிசிக்க)