வேதனையடியவர் போதனைமுனிவர்கள்
நாதனைகரங்குவித் தாதரவாகவே (தெரிசிக்க)
ஈசனேபுலியூரில் வாசனேகனகச
பேசனேயென்றுநட ராஜனைப்போற்றி (தெரிசிக்க)
காமத்தையகல்பவர்
வாமத்தினின்றுசிவ
நாமத்தைச்சொல்லியர்த்த சாமத்தில்வந்து
(தெரிசிக்க)
ஞாலம்புகழுமவன் மாலையணியுங்கோ
பாலகிருஷ்ணன்தொழுஞ் சீலபொற்பாதத்தை. (தெரிசிக்க)
___________
வசனம்.
நந்தனார் தெரிசனஞ்செய்ய உத்தாரங்கேட்க
அந்தணர்சொல் லுகின்றார்:
விருத்தம்.
புத்திசொல்லிக் கேளாத மூடாவுன்
தன்
புரட்டெல்லா நானறிவேன் போடா
போடா
பத்தியென்றுஞ் சித்தியென்றும்
பறையர்க் கேது
பார்ப்பார தெய்வமது பாலிக்காது
குற்றமுண்டுன் சாதியிலே வழக்கமில்லாக்
கொள்கையது சேரியிலே கூடாதப்பா
பித்தமது கொண்டவன்போ லிங்கேவந்து
பேசாதே போபோவென் றேசுவானே.
ராகம்-முகாரி; தாளம்-ஆதி.
பல்லவி.
சிதம்பரதெரிதனமா-நீயதைச்-சிந்திக்கலாமாபறையா.
|