திருநாளைப்போவார்85நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கீழேபுரண்டழுது தத்துபித்தென்றுத் தள்ளாடிய காரணமென்ன” வென்று அந்தணர்
நந்தனாரைக் கேட்கின்றார்.

ராகம்-ஸூர்யகாந்தம்; தாளம்-மிச்ர ஏகம்.

பல்லவி.

நந்தாவுனக்கிந்தப்ரமை வந்தகாரணம் நானறிந்திடச் சொல்லுவாய்.

அனுபல்லவி.

அந்தரங்கமுள்ள சொந்தப்பறையனா
யண்டியிருப்பதுபோய் சண்டைபிடிக்கவந்தாய் (நந்தா)

சரணங்கள்.

சாதிமுறைமைதுறந்தாய்-தில்லைச்
     சபாபதியைநினைந்தாய்
சூதுக்காரப்பறையருடன்கூடிச்
     சும்மாவிருப்பது-எம்மாத்திரம்நான் (நந்தா)

குலத்திலில்லாதவழக்கம்-நீயதைக்
     கொண்டாடுகிறமுழக்கம்
வெளுத்ததினாலென்ன எருமைச்சாணியது
     மேனியிலணிவாரோ-வையகந்தனில் (நந்தா)

திருட்டுப்புரட்டுமறியாய் பொல்லாத்
     தீங்குவார்த்தையுரையாய்
முரட்டுத்தனத்தையென்முன்னேகாட்டி
     விரட்டிப்பேசுறாய்-வெறிமயக்கமோ அடா (நந்தா)

வசனம்.

வேதியர் நந்தனாரைப்பார்த்துச் சிதம்பரப்பிரமைவந்த காரணமென்னவென்று
கேட்டபின் நந்தனார் வேதியருக்குச் சொல்லுவார்: