திருநாளைப்போவார்86நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

விருத்தம்.

மனங்கண்டவிடமெல்லாம் போகாமலாணையிட்டு மறித்து
வாங்கி அனல்கண்டமெழுகதுபோ லெனதுள்ளந் தனதாக
வருளிக்காக்கும் புனல்கொண்டவேணியனைப்புண்ணியன்
புராந்தகனைப் போற்றிசெய்யக் கனங்கொண்டதில்லை நகர்
போய்வருவேன் கருணைவழி காட்டுவீரே.

வசனம்.

நந்தனார் வேதியரைப்பார்த்து உத்தாரங்கேட்க அந்தணர் சொல்லுகின்றார்:

ராகம்-ஸாவேரி; தாளம்-ரூபகம்.

பல்லவி.

நட்டநடவுவிளையும்பொட்டவெளியைத்தொட்டபோதிலும் (நட்)

சரணங்கள்.

கெட்டமதியைவிட்டுவிட்டு கேளடாபண்ணையாளடா (நட்)
கிட்டநெருங்கும்பண்ணையுன்சால் பட்டதினால்பசுமைகொண்டு (நட்)

விருத்தம்.

கதிரொருமுழமேநீளுங்கட்டு முக்கலமே காணுந்
துதிபெறுநந்தாவுன்கைதொட்டதேதங்கமாகும்
பதிதனிற்பெருமைசொல்லும்பறையனாயிருந்துந்தில்லைச்
சிதம்பரப்பித்தேன் கொண்டாய்செய்தொழிலோ வென்றார்.

வசனம்.

நந்தனாருக்குச் சிதம்பரப்பித்து தெளியாமையால் வேதியர் என்னசெய்யப்
போகிறேனென்று துயரமுற்று நந்தனாரைப்பார்த்துப் புலம்புவார்: