ராகம்-தன்யாசி;தாளம்-ஜம்பை.
பல்லவி.
பித்தனாய்ப்போனதென்ன-நந்தா
(பித்த)
அனுபல்லவி.
எத்தனையோபுத்திக ளெடுத்துப்படித்தும்
(பித்த)
சரணங்கள்.
சித்தமிப்படி செய்ததாரோ
பத்துதலில்லாமலே பண்ணியவராரோ
பக்தியென்றும்பெய ரிட்டதாரோ
நித்தமும் இப்படியே நிலையிட்டதாரோ (பித்த)
எத்திசைகளும்புகழ்
பெற்றிருந்தும்-பல
வித்தைகளனேகம் விளம்பத்தெரிந்தும்
பக்தியோடுசகல மும்அறிந்தும்உனது
கர்த்தனெனும் பேரோடு நானேயிருந்தும்.(பித்த)
____________
வசனம்.
மனதிற்றுயரமுற்ற வேதியரை
நந்தனார்
மிகவும் வணங்கிச் சொல்லுகின்றார்:
விருத்தம்.
பித்தமதுதெளிந்துவிடமருந்துண்டு
தில்லைவனம்பேணிச்சென்று
சத்திசிவகாமிப்பெண்சந்நிதியி னேராகித்தலைவணங்கி
தித்தியென்றுநடநமிடுந்திருக்கோலங் கண்குளிரத்தெரிசித்தானால்
பித்தமதுதெளிந்துவிடும்வே தாந்தமழைசொரியும்பெரியகோவே.
|