திருநாளைப்போவார்88நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம் - எதுகுலகாம்போதி; தாளம் - மிச்ர ஏகம்.

பல்லவி.

பித்தந்தெளிய மருந்தொன்றிருக்குது - பேரின்பமன்றுள்ளே.

அனுபல்லவி.

மற்றமருந்துகள் தின்றாலுமுள்ளுக்கு வல்லே வல்லே-ஐயே அடுமை                            (பித்தந்தெளிய)

சரணங்கள்.

பாம்பும்புலியுமெய்ப்பாடுபட்டுத்தேடி பார்த்துப்பயிரிட்டது
பாரளந்ததிருமாயனும்வேதனும் பார்த்துக்களித்ததுண்டு
பார்வதியென்றொருசீமாட்டியதில் பாதியைத்தின்றதுண்டு-இன்னம்
பாதியிருக்குபறையாநீயும்போய்ப்-பாரென்றுத்தாரந்தாருந் தீரும் (பித்தந்தெளிய)

பத்துத்திசையும்பரவிப்படர்ந்தாலும் பார்த்துப்பிடியாரே
தத்திக்குதிக்குந்தாளங்கள்போடுந் தண்டைச்சிலம்புகொஞ்சுந்
தித்திக்குந்தேனோசெங்கரும்போநல்ல சித்தமுடையர்க்கே-என்
சித்தத்தைக் கட்டியிழுக்குது அங்கேசென்றால் போதுங்கண்டால் தீரும் 

(பித்தந்தெளிய)

ஊரைச்சொன்னாலுமிப்பாவந்தொலையு மூழ்வினையூடறுக்கும்
பேரைக்கொண்டாடிப்புலம்புகிறார்வெகு பேர்களுக்குப்பிழைப்பு
சாருநரைதிரைதீருமருந்துச் சாதியைப்பாராது-இன்னந்
தீராதநோய்கள் படைத்தவெனக்குத் தீருந்தீருமையே அடுமை

(பித்தந்தெளிய)

___________